Home> Tamil Nadu
Advertisement

போலீஸ் அதிகாரி அத்துமீறல்: பலியான கர்ப்பிணி பெண்!

ஹெல்மெட் போடாத தம்பதியை எட்டி உதைத்த போலீஸார்..! சம்பவ இடத்திலேயே பலியான 3 மாத கர்ப்பிணிப் பெண்.

போலீஸ் அதிகாரி அத்துமீறல்: பலியான கர்ப்பிணி பெண்!

திருச்சி: திருச்சியின் திருவெறும்பூர் பகுதியில், இருசக்கர வாகனத்தில் தனது கணவருடன் சென்றுகொண்டிருந்த உஷா என்ற 3 மாத கர்ப்பிணி, கீழே விழுந்து உயிரிழந்தார். ஹெல்மெட் சோதனை செய்ய அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த இருந்த காவல்துறை அதிகாரி, அவர்களது வாகனத்தை எட்டி உதைத்தால் தான் உஷா கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். 

இதைத் தொடர்ந்து அந்த பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புக்காக காவல்துறை அதிகாரிகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சாலையை மறித்து போராட்டம் செய்துவரும் பொதுமக்கள் உடனே கலைந்து செல்ல வேண்டுமென உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் பதற்றம் நிலவி வருகிறது.

Read More