Home> Tamil Nadu
Advertisement

சிவகங்கை அருகே பிரபல ரவுடி சுட்டுக் கொலை

சிவகங்கை அருகே பிரபல ரவுடி சுட்டுக் கொலை

சிவகங்கை மாவட்டத்தில் பிரபல ரவுடியை போலீசார் தூப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தனர்.

மதுரையிலிருந்து சிவகங்கை மாவட்டம் நோக்கி கார்த்திகை சாமி தலைமையிலான ஆறுபேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் பங்கிலிருந்த பணத்தை பிடுங்கிச் சென்றனர்.

இதுதொடர்பாக பெட்ரோல் பங்கைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர். அப்போது அங்கு தொடர்பு கொண்ட வேல்முருகன் என்ற போலீசை தாக்கி அவர்கள் தப்பிச் சென்றார்கள்.

இதனையடுத்து அவர்கள் ஒரு தனியார் தோட்டத்தில் மறைந்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் அந்த தோட்டத்திற்கு சென்ற போலீசார் மீது கார்த்திக்கை சாமி உட்பட அந்த கும்பல் போலீசார் மீது தாக்குதல் நடத்தினார். 

இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார்த்திகைசாமி மீது குண்டு பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அப்போது தப்ப முயன்ற கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Read More