Home> Tamil Nadu
Advertisement

கிரீன் சிக்னல்.... மோடி அமைச்சரவையில் இடம் பெரும் ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ஆர்.?

மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ள மோடி அமைச்சரவையில் ஓ.பி.எஸ். மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாருக்கு இடம் கிடைப்பது உறுதி எனத் தகவல்.

கிரீன் சிக்னல்.... மோடி அமைச்சரவையில் இடம் பெரும் ஓ.பி.எஸ். மகன் ஓ.பி.ஆர்.?

புது டெல்லி: 17-ஆம் மக்களவை தேர்தலில் பாஜக தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. வரும் 30 ஆம் தேதி மோடி அமைச்சரவை பதவியேற்க்க உள்ளார். அமைச்சரவையில் யாருக்கு எல்லாம் இடம் கிடைக்கும்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

542 தொகுதிகளுக்கு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-க்கு அதிகமான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது பாஜக. இந்தியா முழுவதும் மோடி அலை வீசினாலும், தமிழகத்தை பொருத்த வரை திமுக அலை தான் வீசியது என்று தான் கூற வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுசேரி மாநிலத்தில் 39 தொகுதிக்கு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் 38 இடங்களை திமுக கூட்டணி வென்றுள்ளது. பாஜக-அதிமுக கூட்டணி வெறும் ஒரே இடத்தில் மட்டும் வெற்றி பெற்றது. அதிலும் பாஜக தான் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் தேனி பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்றார்.

தற்போது பாஜக - அதிமுக கூட்டணி வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் என்பதால், அவரை எப்படியாவது அமைச்சராக்கி விட வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறார். அதற்கான பாஜகவை சேர்ந்த முக்கிய தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். மேலும் தன் மகனுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்க வேண்டும் என நேரடியாக பாஜக மேலிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாக நம்பத்தகுந்த வட்டாரம் கூறியுள்ளது. அதற்கு பாஜக மேலிடம் மற்றும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. தமிழகத்திலிருந்து ஓ.பி. ரவீந்திரநாத் குமார் அமைச்சராக தேர்ந்தேடுக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் மறுபுறத்தில் தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓ.பி. ரவீந்திரநாத் குமார் சதி வேலைகளை செய்து வெற்றி பெற்றுள்ளார். அதற்க்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் குமாரின் வெற்றியை எதிர்த்தும், தேர்தல் ஆணையத்தின் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன் என அதே தொகுதியில் போட்டியிட்ட தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Read More