Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். 

தமிழகத்தின் புதிய முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்

சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா காலமானதைத் தொடர்ந்து புதிய முதல்வராக ஓ. பன்னீர்செல்வம் பதவியேற்றார். 

முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஜெயலலிதா நேற்று இரவு 11:30 மணி அளவில் காலமானார்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்.,கள் கூட்டத்தில் அதிமுக சட்டசபை கட்சித் தலைவராக நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தமிழகத்தின் புதிய முதல்வராக இன்று அதிகாலை 1 மணி அளவில் ஓ பன்னீர்செல்வம் பதவியேற்றார். 

அவருக்கு தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்பு பிரமாணம் செய்து வைத்தார். மேலும் அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர். பெரும்பாலும் ஏற்கெனவே இருந்தவர்களே மீண்டும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

Read More