Home> Tamil Nadu
Advertisement

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அரசு மருத்துவமனை செவிலியர்: கொலையாளி யார்?

உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே லைட் மற்றும் மின்விசிறி ஓடிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்தனர். 

ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த அரசு மருத்துவமனை செவிலியர்: கொலையாளி யார்?

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வி(வயது46). இவர் ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவருடைய கணவர் பெயர் சுரேஷ். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். 

கணவர் சுரேஷ் திண்டுக்கல் நாகல் நகரில் சமையல் வேலை செய்து வருகிறார். அவருடன் மகனும், மகளும் தங்கி படித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி பாப்பம்மாள்புரத்தில் செல்வி மட்டும் தனியாக வசித்து வந்தார். 

இந்நிலையில் நேற்று இரவு கணவர் சுரேஷ் தனது மனைவிக்கு பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சுரேஷ், ஆண்டிப்பட்டியில் வசிக்கும் தனது உறவினர்களிடம் தொடர்பு கொண்டு செல்வி வீட்டில் போய் பார்க்கும் படி கேட்டுள்ளார். 

ALSO READ:பொதுவழி விட மறுத்த குடும்பத்தை கம்பிவேலியில் 4 நாட்களாக சிறை வைத்த சங்கராபுர மக்கள் 

இதனையடுத்து உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. ஆனால் உள்ளே லைட் மற்றும் மின்விசிறி ஓடிக் கொண்டிருந்ததால், சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, செல்வி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

fallbacks

இதுகுறித்து உறவினர்கள் ஆண்டிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட போலீஸ் (TN Police) சூப்பிரண்டு டோங்ரே பிரவீன் உமேஷ், ஆண்டிப்பட்டி டி-.எஸ்.பி தங்ககிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். 

செவிலியர் குடியிருந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள், செவிலியர் செல்வியின் செல்போன் விவரங்கள் கொண்டு ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியை தேடி வருகின்றனர்.

தனியாக வசித்து வந்த பெண் செவிலியர் செல்வி இந்த வகையில், தன் சொந்த வீட்டில் உயிர் இழந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:கோவை மாணவி தற்கொலை வழக்கில் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More