Home> Tamil Nadu
Advertisement

புதைக்கப்பட்ட பெண்ணின் உடலில் தலையை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டையில் உள்ள பாரதிதாசன் நகரில் மர்ம நபர்கள் புதைக்கப்பட்ட பெண்ணின் உடலில் தலையை வெட்டி சென்றுள்ளனர்.   

புதைக்கப்பட்ட பெண்ணின் உடலில் தலையை வெட்டி சென்ற மர்ம நபர்கள்!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தின் ஜோலார்பேட்டையில் உள்ள பாரதிதாசன் நகர் என்கிற பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன்.  இவருக்கு திருமணமாகி 45 வயதில் மாதம்மாள் என்கிற மனைவி இருக்கிறார்.  கிருஷ்ணன் ஃபிளாட்பாரங்கள் மற்றும் ரயில்களில் டீ வியாபாரம் செய்யும் தொழிலை செய்து வருகிறார்.   இவரது மனைவி வீட்டில் தான் இருக்கிறார்.  அன்றாடம் கிடைக்கும் வருமானத்தினை வைத்து இவர்கள் இருவரும் தங்களது வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் கிருஷ்ணனின் மனைவி மாதம்மாளுக்கு எதிர்பாராத விதமாக உடல் நிலை பாதிக்கப்பட்டு,செயல்பட இயலாமல் படுத்த படுக்கையாகி விட்டார். மனைவியின் நிலையை கண்டு வருந்திய கணவன் கிருஷ்ணன் இவரை அருகிலுள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.  அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை போதாத நிலையில் மனைவியை மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காத காரணத்தினால் மருத்துவமனையிலேயே அவரது மனைவி உயிர் பிரிந்தது.

ALSO READ குற்றம்சாட்டிய பெண்ணுடன் சேர்ந்து உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு!

அதனைத்தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து அவரது உடல் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது. அதன் பின்னர் நேற்று முன்தினம் அவரது உடலை அவர்கள் வசிக்கும் பாரதிதாசன் நகரில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்று உறவினர்கள் முறைப்படி அடக்கம் செய்தனர்.   இந்நிலையில் நேற்று முன்தினம் சுடுகாட்டில் இரவு நேரத்தில் மாதம்மாள் அடக்கம் செய்யப்பட்டு இருந்த இடத்தின் அருகில் மர்ம நபர்கள் சிலர் மது அருந்தி இருக்கின்றனர்.  அப்போது போதையில் இருந்த அவர்கள் மாதம்மாளை புதைத்திருந்த இடத்தினை தோண்டி அவரின் உடலை வெளியை எடுத்து,தலையை மட்டும் தனியாக வெட்டி எடுத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீயாய் பரவியது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தோண்டப்பட்ட இடத்தை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினர்.  அப்போது தான் அங்கு மர்ம நபர்கள் யாரோ மது அருந்தி இருப்பதும் ,மேலும் மாதம்மாள் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி கழுத்தை அறுத்து விட்டு சென்றிருக்கிறார்கள் என்பது முதல் கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.   மேலும் அந்த சுடுகாட்டு பகுதிக்கு சென்று மது அருந்தியவர்கள் எல்லாம் யார்? எந்த காரணத்திற்காக மாதம்மாளின் தலை வெட்டப்பட்டது? என்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இருப்பினும் ,புதைக்கப்பட்ட உடலை மர்ம நபர்கள் இவ்வாறு கொடூரமாக செய்தது அப்பகுதியில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ அசைவ பிரியர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி! தீபாவளிக்கு கறிக்கடை கிடையாது

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More