Home> Tamil Nadu
Advertisement

கொலையா? விபத்த? சாலையோரம் 5 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு

விழுப்புரத்தில் சாலையோரம் இருந்த துணி அயர்ன் செய்யும் வண்டியில், உடலில் எந்த காயங்களும் இல்லாத நிலையில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான். 

கொலையா? விபத்த? சாலையோரம் 5 வயது சிறுவன் சடலமாக கண்டெடுப்பு

விழுப்புரம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மேல் தெரு என்ற இடத்தில் சிவகுரு என்பவர் உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையோரம் நான்கு சக்கர தள்ளுவண்டியில் சலவை தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு கடையை அடைத்து வீட்டுக்கு சென்ற சிவகுரு இன்று மீண்டும் காலை வந்துள்ளார். அப்போது அவர் அங்கு பார்த்த போது தள்ளுவண்டியில் 5 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தை இருந்துள்ளது. அந்த குழந்தை தூங்கிக் கொண்டிருந்தது என நினைத்து அக்கம் பக்கத்தினரும் அவர் கூறவே அனைவரும் அந்த சிறுவனை தட்டி எழுப்ப முயற்சி செய்தனர்.

ALSO READ | குடும்பம் நடத்த வராத மனைவியை கொலை செய்த கணவர் கைது!!

ஆனால் சிறுவன் அசைவின்றி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்து அவர் விழுப்புரம் மேற்கு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அந்த குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை செய்த போது ஆண் குழந்தை இறந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.

இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் குழந்தையின் புகைப்படத்தை காட்டி விசாரணை மேற்கொண்டதில் அனைவரும் தங்கள் வீட்டு குழந்தை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் விழுப்புரம் மேற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

யாருடைய குழந்தை, விழுப்புரம் பகுதியை சேர்ந்த குழந்தையா அல்லது யாராவது வெளியே கொலை செய்துவிட்டு கொண்டு வந்து இந்த தள்ளு வண்டியில் குழந்தை உடல் தூக்கி வீசப்பட்டதா என்பது குறித்து விழுப்புரம் மேற்கு காவல் துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐந்து வயது ஆண் குழந்தை சடலமாக சாலையோரம் தள்ளுவண்டியில் மீட்கப்பட்ட சம்பவம் விழுப்புரம் பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | திருமணம் செய்து ஏமாற்றினாரா விஏஓ? தர்ணாவில் ஈடுபட்ட இளம்பெண் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Read More