Home> Tamil Nadu
Advertisement

மாற்று சித்தாந்த கருத்துகளை மதிக்க வேண்டும் - MK ஸ்டாலின்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் - எழுத்தாளருமான திரு ரவிக்குமார் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!ய

மாற்று சித்தாந்த கருத்துகளை மதிக்க வேண்டும் - MK ஸ்டாலின்!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் - எழுத்தாளருமான திரு ரவிக்குமார் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்!ய

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"மாற்றுச் சித்தாந்தம் கொண்டோரின் கருத்துகளுக்கு மதிப்பளித்து ஜனநாயக ரீதியாக கருத்துக்கு கருத்து என்ற பண்பட்ட முறையில் பதில் சொல்ல முடியாத தேச விரோதிகள், அங்கொருவர் இங்கொருவர் எனத் தலை தூக்கி, அவர்கள் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும் - எழுத்தாளருமான திரு ரவிக்குமார் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பதாக வரும் செய்திகள் மிகுந்த கவலையளிக்கிறது.

ஆக்கபூர்வமாக கருத்துகளைத் தெரிவிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் அபாயகரமான போக்கு தமிழகத்தில் குறிப்பாக அ.தி.மு.க ஆட்சியில் அதிகரித்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகவே, மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்து, திரு ரவிக்குமாருக்கு உரிய பாதுகாப்புகளை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும், இதுபோன்ற தீவிரவாத வன்முறையில் ஈடுபட நினைக்கும் வெறியர்களை சட்டத்தின் துணை கொண்டு முளையிலேயே கிள்ளியெறிந்து, சமூகத்தில் நல்இணக்கத்தையும், அமைதியையும் வளர்த்தெடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

Read More