Home> Tamil Nadu
Advertisement

நெல்லையில் பலத்த பாதுகாப்புடன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா!

தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

நெல்லையில் பலத்த பாதுகாப்புடன் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா!

தமிழக அரசு சார்பில் மறைந்த முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் நூற்றாண்டு விழாவானது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்த வகையினில் இன்று நெல்லையில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் விமானம் மூலம் நெல்லை பயனிக்கின்றார்.

இந்த விழா பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறுகின்றது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் எம்ஜிஆர் படத்தை பழனிசாமியும்,ஓ.பன்னீர்செல்வமும் திறந்து வைக்கின்றனர்.  பிறகு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். 

முதல்வர் மற்றும் துணை முதல்வர் வருகையொட்டி நெல்லை நகர் பலத்த பாதுகாப்புடன் காட்சியளிக்கின்றது.

இந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More