Home> Tamil Nadu
Advertisement

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி, உதை

செங்கம் அருகே பள்ளிமானவிக்கு வகுப்பறைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியருக்கு சரமாரி தாக்குதல்....

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியருக்கு சரமாரி அடி, உதை

செங்கம் அருகே பள்ளிமானவிக்கு வகுப்பறைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியருக்கு சரமாரி தாக்குதல்....

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கண்ணக்குருக்கை மேல்நாச்சிப்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு கணித ஆசிரியர் கண்ணன் பாலியல் தொல்லை கொடுத்ததால் அவரை ஊர் மக்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து மாணவர்களுக்கு விடுமுறை அளித்திருந்த நிலையில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக சிறப்பு வகுப்பு நடைபெற்றுள்ளது. அப்போது கணிதம் பாடத்திற்கான சிறப்பு வகுப்பு முடிந்த உடன் குறிப்பிட்ட அந்த மாணவியை ஆசிரியர் கண்ணன் தனியாக அழைத்து வந்து தலைமையாசிரியர் அறையில் வைத்து தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார்.

அதனை கண்டு பயந்த மாணவி கூச்சலிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இது தொடர்பாக மாணவி தனது பெற்றோர்களிடம் தெரிவித்த போது ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர். மேலும், தலைமை ஆசிரியரிடம் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது வகுப்பறையில் இருந்த குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் கண்ணன் மீது பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஆசிரியருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆசிரியரை விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

 

Read More