Home> Tamil Nadu
Advertisement

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிடம் நாளை இடிக்கப்படும்

சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள கட்டிடம் நாளை  இடிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அடுக்குமாடி கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகினர். 

மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டிடம் நாளை இடிக்கப்படும்

சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள கட்டிடம் நாளை  இடிக்கப்படும் என சி.எம்.டி.ஏ. தகவல் தெரிவித்துள்ளது. மவுலிவாக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அடுக்குமாடி கட்டப்பட்டு வந்த கட்டடம் இடிந்து விழுந்ததில் 61 பேர் பலியாகினர். 

இதனிடையே அதன் அருகே உள்ள மற்றொரு 11 மாடிக் கட்டிடத்தை இடிக்க வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், 2-வது கட்டிடத்தை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடம் நாளை இடிக்கப்படுகிறது.

நாளை பிற்பகல் 4 மணிக்குள் கட்டிடம் இடிக்கப்படும். கட்டிடம் இடிக்கப்படுவது குறித்து அப்பகுதி மக்கள் எந்த வித அச்சம் கொள்ளத் தேவையில்லை என சி.எம்.டி.ஏ. தெரிவித்துள்ளது. 

Read More