Home> Tamil Nadu
Advertisement

மேட்டுப்பாளையம் விபத்து: உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியமை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

மேட்டுப்பாளையம் விபத்து: உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது

மேட்டுப்பாளையத்தில் 17 பேர் பலியாக காரணமான சுவரின் உரிமையாளர் சிவசுப்ரமணியமை தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் இன்று காலை பாறைகள் உருண்டு கீழே இருந்த வீடுகள் மீது விழுந்தன. இதில் 4 வீடுகளின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தன.

இந்த விபத்தில், குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு 4 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளது. 

 இந்நிலையில் மேட்டுப்பாளையம் அருகே 17 பேரை பலிகொண்ட சுவர் கட்டிய வீட்டு உரிமையாளர் கைது செய்யப்பட்டார். 

Read More