Home> Tamil Nadu
Advertisement

சபாநாயகருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!!

சபாநாயகருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ்!!

ஓ.பி.எஸ்-ஸின் 12 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய வழக்கு விசாரணையில் சபாநாயகருக்கு சென்னை ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

12 சட்டமன்ற உறுப்பினா்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று திமுக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிமுக-வில் பிளவு ஏற்பட்டதைத் தொடா்ந்து ஓ.பன்னீர்செல்வம் 12 சட்டமன்ற உறுப்பினர்கள் தனியாக பிரிந்த நிலையில் அவர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மாறி வாக்களித்தனர்.

இதனைத் தொடா்ந்து கட்சி மாறி வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் 12 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்று திமுக சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்த்து.

இந்த வழக்கானது இன்று நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ரவிச்சந்திரபாபு, திமுக வழக்கு குறித்து சபாநாயகர் வரும் 12-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Read More