Home> Tamil Nadu
Advertisement

மதுசூதனன் என்னைப்பற்றி கூறியது நாகரிகமற்ற பேச்சு: தீபா

மதுசூதனன் என்னைப்பற்றி கூறியது நாகரிகமற்ற பேச்சு: தீபா

என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருப்பது நாகரிகமற்ற பேச்சு என தீபா தெரிவித்துள்ளார்.

ஆர்கேநகர் தொகுதியில் எம்ஜிஆர் அம்மா, தீபா பேரவை சார்பில் போட்டியிடும் தீபா பிரச்சாரம் செய்தார். அப்போது அதிமுக யாருடைய கையில் சிக்கக் கூடாது என்று ஜெயலலிதா நினைத்தாரோ அவர்களே இன்று கட்சியை நடத்தி வருகின்றனர். சில காலம் அவர்களோடு இருந்தவர்களும் இன்று ஓட்டு கேட்டு வருகிறார்கள் என ஓ பன்னீர்செல்வம் அணியினரையும் அவர் சாடினார். மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வருவேன் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். 

ஜெயலலிதா மரணத்தில் நீடிக்கும் மர்மங்களை நிச்சயமாக நான் வெளியில் கொண்டு வருவேன் என தீபா கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலிலதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயகுமார் என்னை அரசியல் தெரியாத குழந்தை என மதுசூதனன் கூறியிருப்பது நாகரிகமற்ற பேச்சு என்றும் தெரிவித்துள்ளார்.

 

Read More