Home> Tamil Nadu
Advertisement

கந்தன்சாவடி கட்டிட விபத்து: இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி!

சென்னை கந்தன்சாவடியில் சாரம் சரிந்த விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு! 

கந்தன்சாவடி கட்டிட விபத்து: இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதி!

சென்னை கந்தன்சாவடியில் சாரம் சரிந்த விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு! 

கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனையில் ஜெனரேட்டர் அமைக்கும் பணிக்காக கட்டிடத்தின் பின்புறத்தில் சாரம் அமைக்கப்பட்டிருந்தது. இப்பணியில் 30-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டிருந்தனர். அதிக பாரம் தாங்காமல் சாரம் சரிந்து விழுந்ததில் 23 பேர் படுகாயத்துடன் வெவ்வேறு தனியா மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதில் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் பப்லு என்ற 18 வயதுடைய பீகார் கட்டிடத்தொழிலாளி சடலாமாக மீட்கப்பட்டார்.

இதை தொடர்ந்து, சென்னை கந்தன்சாவடியில் சாரம் சரிந்த விபத்தில் இறந்த பப்லு பீகாரை சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி குடும்பத்துக்கு சுமார் ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

 

Read More