Home> Tamil Nadu
Advertisement

ஜெயலலிதா மறைவு: 77 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பற்றி கேட்ட பிறகு குறைந்தது 77 பேர் அதிர்ச்சி காரணமாக இறந்தார் என்று தமிழ்நாடு ஆளும் கட்சி அதிமுக கூறியுள்ளது.

ஜெயலலிதா மறைவு: 77 பேர் அதிர்ச்சியில் உயிரிழந்தனர்!!

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பற்றி கேட்ட பிறகு குறைந்தது 77 பேர் அதிர்ச்சி காரணமாக இறந்தார் என்று தமிழ்நாடு ஆளும் கட்சி அதிமுக கூறியுள்ளது.

உயிரிழந்த 77 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அதிமுக தலைமைக்கழகம் அறிவித்து உள்ளது. உயிரிழந்த மக்களின் பெயர் பட்டியலை அதிமுக கையாளும் டிவிட்டார் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் இறந்து போன செய்தியைக் கேட்டு மனவேதனையும் அதிர்ச்சியும் அடைந்து 77 பேர் உயிரிழந்துள்ளனர். 

அகால மரணமடைந்த அவர்களின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கழகத்தின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும். 

ஜெயலலிதா உடல் நலம் குன்றிய செய்தி அறிந்து துயரம் தாளாமல் தீக்குளித்து தொடர் சிகிச்சை பெற்று வரும் ஒரு செயலாளருக்கு கட்சி சார்பில் ரூ.50000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதா அவர்கள் டிசம்பர் 5-ம் தேதி இரவு 11:30 மணி அளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அதிமுக கட்சி சார்பாக இரங்கலை தெரிவித்தனர்.

Read More