Home> Tamil Nadu
Advertisement

ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றம்!!

ஜெயலலிதா சாதாரண வார்டுக்கு மாற்றம்!!

முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக் டர்கள் சிகிச்சை அளித்து வந்தார்கள். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே,தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

அப்பல்லோவின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி "ஜெயலலிதா முற்றிலும் குணமடைந்து விட்டார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரியும். முதல்- அமைச்சர் ஜெயலலிதா குணம் அடைந்து வருகிறார். அவர் மனநிறைவோடு இருக்கிறார். மன நிறைவு என்பதற்கு நான் சொல்லும் பொருள் அவர் முழுமையாக குணம் அடைந்துவிட்டார் என பிரதாப் சி. ரெட்டி கூறியுள்ளார்.

இந்த நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு இன்று மாலை மாற்ற்ப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள்  தெரிவித்து உள்ளன.

Read More