Home> Tamil Nadu
Advertisement

ஜெ., நலம்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தகவல்

ஜெ., நலம்: அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தகவல்

முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டு வருகிறது. மருத்துவர்களின் தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு இன்று மாலை மாற்ற்ப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள்  தெரிவித்து உள்ளன.

அப்பல்லோவின் தலைவர் பிரதாப் சி. ரெட்டி "ஜெயலலிதா முற்றிலும் குணமடைந்து விட்டார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரியும். முதல்- அமைச்சர் ஜெயலலிதா குணம் அடைந்து வருகிறார். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி உள்ளிட்ட சில சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டு வருகிறது. அவரது அனைத்து உடல் உறுப்புகளும் சீரிய முறையில் செயல்படுகிறது என்றார்.  

நேற்று 64-வது நாளாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். வீட்டுக்கு அவர் எப்போது செல்ல வேண்டும் என விரும்புகிறாரோ அப்போது செல்லலாம். இவ்வாறு அவர் கூறினார். 

அப்பல்லோ மருத்துவ குழுவினருடன், லண்டனில் இருந்துவந்த மருத்துவர் ரிச்சர்டு ஜான்பீலே,தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் நிபுணர் மருத்துவர் கில்நானி ஆகியோர் அடங்கிய மருத்துவ குழுவினர் இணைந்து ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More