Home> Tamil Nadu
Advertisement

குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் -மாணவர்கள் எச்சரிக்கை

குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் -மாணவர்கள் எச்சரிக்கை

ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளானர்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும்; ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும். பீட்டாவை உடனடியாக தடை செய்ய வேண்டும் என கோரிக்கைகள் முன் வைத்து போராடி வருகின்றனர்

இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் மற்றும் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதிக்காவிட்டால் வரும் 26-ம் தேதி இந்திய மத்திய அரசின் குடியரசு தினத்தை கருப்பு தினமாக அனுசரிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் மத்திய அரசின் ஆதார் தட்டையை திருப்பி ஒப்படைக்கும் போராட்டத்தையும் நடத்துவோம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More