Home> Tamil Nadu
Advertisement

ஜல்லிக்கட்டு: பிரதமருடன் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு

ஜல்லிக்கட்டு: பிரதமருடன் முதல்வர் ஓ.பி.எஸ் சந்திப்பு

டெல்லி சென்ற முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பிரதமர் மோடியை சந்தித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர்கள் தாங்களாகவே முன்வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
 

3-வது நாளாக இன்றும் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்களின் எழுச்சி காரணமாக முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும் வலியுறுத்த உள்ளதாகவும் கூறினார்.
 
தொடர்ந்து அவர் நேற்று இரவு அவர் டெல்லி புறப்பட்டுச்சென்றார். முதல்வருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணனும் உடன் சென்றனர்.

டெல்லியில் உள்ள தமிழக அரசின் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர் பன்னீர் செல்வம், லோக் கல்யாண் மார்க்கில் உள்ள வீட்டில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். 

Read More