Home> Tamil Nadu
Advertisement

அமைச்சர் வீட்டில் கட்டுக்கட்டாக புதிய ரூ2000 நோட்டுக்கள் பறிமுதல்

அமைச்சர் வீட்டில் கட்டுக்கட்டாக புதிய ரூ2000 நோட்டுக்கள் பறிமுதல்

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் காலை 6.30 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமானவரித் துறையினர் சோதனையை முன்னிட்டு அமைச்சர் இல்லத்தில் சி.ஆர்.பி.எஃப்., வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனையில் கட்டுக்கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவை அனைத்தும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர். யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற வரவு செலவு கணக்குகளும் கைப்பற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். 

அமைச்சருக்கு சொந்தமான சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியிலும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது விடுதியில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Read More