Home> Tamil Nadu
Advertisement

முன் ஜாமீன் மறுப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ப.சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

முன் ஜாமீன் மறுப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த ப.சிதம்பரம்

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டு உள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது. இதற்கு, அந்நிய முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகவும், அதில் கார்த்தி சிதம்பரத்தின் தலையீடு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ கைது செய்யாமலிருக்க முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று வந்தது. அப்பொழுது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்புக்கள் ப.சிதம்பரம் விசாரணைக்கு சரியாக ஒத்துழைப்பு தரமறுக்கிறார். அதனால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் ப.சிதம்பரம் தரப்பு மேல்முறையீடு செய்ய 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது. 

இதனையடுத்து ப.சிதம்பரம் தரப்பில் முன் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்ததில் மேல் முறையீட்டு செய்துள்ளனர்.

Read More