Home> Tamil Nadu
Advertisement

ஓபிஎஸ்க்கு நிதியமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பேன்: ஜெயக்குமார்

ஓபிஎஸ்க்கு நிதியமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பேன்: ஜெயக்குமார்

ஓபிஎஸ் அணியிருடன் நாளை பேச்சு நடத்தப்படலாம் என அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் ஆட்சியை காப்பாற்றவும், இரட்டை இலையை மீட்கவும் தனது நிதி துறையை ஓபிஎஸ் கேட்டால் கூட இழக்க தயார் என்றும் பதில் அளித்தார்.

தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சேத்துப்பட்டு ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.  பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:-

அதிமுக அணியினரின் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் திறந்த மனதுடன் உள்ளோம். அதிமுக தலைமையகத்திற்கு ஓபிஎஸ் அணியினர் வந்தால் பேச்சுவார்த்தை நடக்கும். நாளையே இந்த பேச்சு நடக்கலாம். அதிமுக எம்எல்ஏ ஒற்றுமையாக உள்ளனர். ஆட்சி தொடரவே எம்எல்ஏக்கள் விரும்புகின்றனர் என்றார். 

மேலும் ஓபிஎஸ் நிதி துறையை கேட்டால் கொடுப்பீர்களா என்ற கேள்விக்கு அவர், அதிமுக கட்சி, ஆட்சி நலன் கருதியும், இரட்டை இலை மீட்கவும் என்னிடம் உள்ள நிதித்துறை, திட்ட செயலாக்கம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் இழக்க தயாராக உள்ளேன். கட்சிக்காக தியாகம் செய்ய தயார். 

இவ்வாறு அவர் கூறினார்.

Read More