Home> Tamil Nadu
Advertisement

ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தொடர்ந்து 3-வது நாளாக தடை!!

ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது!!

ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்க தொடர்ந்து 3-வது நாளாக தடை!!

ஒகேனக்கலில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது!!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சுற்றுலா தளங்களான ஒகேனக்கல், கோவை குற்றாலம், குற்றாலம் போன்ற பல்வேறு பகுதிகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தொடர்ந்து தடை விதித்து வருகிறது.  

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து சுமார் 30,000 கன அடிக்கு மேல் வருவதால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளது!  

 

Read More