Home> Tamil Nadu
Advertisement

கள்ளக்குறிச்சி ADMK MLA பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு நீதிமன்றம் அனுமதி

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி ADMK MLA பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு நீதிமன்றம் அனுமதி

Chennai: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுடன் செல்ல மனைவி சவுந்தர்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு (ADMK MLA) மற்றும் கல்லூரி மாணவி சவுந்தர்யா இருவரும் காதல் திருமணம் செய்துக்கொண்டனர். இதனையடுத்து சவுந்தர்யாவின் தந்தை, தனது மகளை மீட்டுத்தர வேண்டும் எனக்கூறி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இன்று, இந்த வழக்கின் மீது விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் நேரில் ஆஜரானா மகள் மற்றும் தந்தை தங்கள் நியாங்களை வைத்தனர். எம்.எல்.ஏ. பிரபுவுடன் தனது விருப்பத்தின்பேரிலேயே சென்றேன். என்னை யாரும் கட்டப்படுத்தவில்லை என மகள் சௌந்தர்யா விளக்கம் அளித்தார். இதனையடுத்து கணவர் பிரபுவுடன் சேர்ந்து செல்ல மகள் சௌந்தர்யா விருப்பம் தெரிவித்ததால், அவரது தந்தை சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.

ALSO READ | அதிமுக எம்.எல்.ஏ தனது மகளை கடத்தி சென்றதாக பகீர் புகார் அளிக்கும் கோயில் அர்ச்சகர்

கடந்த 5 ஆம் தேதி கள்ளக்குறிச்சி (Kallakurichi) எம்எல்ஏ பிரபு மற்றும் சவுந்தர்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டார்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More