திமுக தலைவர் MK ஸ்டாலின் அவர்களின் சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராக உள்ளோம் என பாஜக தேசிய செயலாளர் H ராஜா அவர்கள் தெரிவித்துள்ளார்!
முன்னதாக இன்று திமுக தலைவராக பதவியேற்ற MK ஸ்டாலின் அவர்கள், பதவியேற்பு நிகழ்ச்சியின் போடு "இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட இளைஞர்கள் அனைவரும் திறண்டு வாருங்கள்" என அழைப்பு விடுத்தார்.
தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளே,
— M.K.Stalin (@mkstalin) August 28, 2018
இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வா!
முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எரிய வா!
அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிப்போம்! இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு! pic.twitter.com/NUSYpazQa2
இந்நிலையில் இவருக்கு பதில் அளிக்கும் வகையில் பாஜக தேசிய செயலாளர் H ராஜா அவர்கள் "திமுக தலைவர் MK ஸ்டாலின் அவர்களின் சவாலை ஏற்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராக உள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சவாலை ஏற்க்க மோடியின் காவித் தொண்டர்கள் தயாராகவே உள்ளோம். களம் காண்போம். pic.twitter.com/5q1FqNalYL
— H Raja (@HRajaBJP) August 28, 2018
மேலும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் வரும் செப்.,2-ஆம் நாள் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்று காவி தொண்டர்களின் பலத்தை காட்ட தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நான் தயாராகவே உள்ளேன். காவிகளின் சக்தியை காட்ட 2.9.18 வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்து கொள்ள திரண்டு வாருங்கள் https://t.co/MTZGXCmZ4Y
— H Raja (@HRajaBJP) August 28, 2018
இந்து கோவில்களை காத்திட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி வரும் செப்., 2-ஆம் நாள் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் TNHRCE சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படவுள்ளது. அந்த அரப்போராட்டத்திற்கு H ராஜா அவர்கள் தலைமை ஏற்கவுள்ளார்.
2.9.18 இந்து அறநிலையத்துறை சொத்துக்கள் நிர்வாகம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற கோரி அன்று காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் Hindu Temple Reclaim Movement சார்பாக நடைபெற்ற உள்ளது. அனைவரும் வந்து இந்து ஆலயங்கள் காக்க ஒன்றுபடுவோம். pic.twitter.com/ovF5DH7SWo
— H Raja (@HRajaBJP) August 27, 2018
இந்நிலையில் இன்று திமுக தலைவராக பதவியேற்ற ஸ்டாலின் காவி தொண்டர்கள் குறித்து கருத்தினை வெளியிட, அவரது கருத்திற்கு பதில் அளிக்கும் வகையில் H ராஜா அவர்களும் மோடி அரசின் பலத்தை காண்பிக், நடைபெறவிருக்கும் உண்ணாவிருத போராட்டத்தினை கருவியாக கையில் எடுத்துள்ளார்.