Home> Tamil Nadu
Advertisement

பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம்

சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதால் 17 ஆம் தேதி கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம்...! 

பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம்

சென்னையில் பெரியார் சிலை மீது காலணி வீசியதால் 17 ஆம் தேதி கைதான வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம்...! 

பெரியார் சிலை மீது காலணி வீசிய வழக்கறிஞர் ஜெகதீசனை குண்டாஸ் சட்டத்தில் அடைக்க சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் மாலை அணிவிக்க வந்தனர். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் பெரியார் சிலை மீது காலணியை வீசினார். அவரை பிடித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கினர். 
 
பின்னர் போலீசார் அந்த நபரை அழைத்து சென்றனர். அவர்கள் நடத்திய விசாரணையில் அவர் வழக்கறிஞர் என்பதும் அவரது பெயர் ஜெகதீசன் என்பது தெரியவந்தது. பின்னர் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். 

 

Read More