Home> Tamil Nadu
Advertisement

பஞ்சரான லாரி மீது அரசு பஸ் மோதியதில் 6 பேர் பலி 10 பேர் காயம்

பஞ்சரான லாரி மீது அரசு பஸ் மோதியதில் 6 பேர் பலி 10 பேர் காயம்

இன்று காலை திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் வந்துகொண்டிருந்தது. சின்னாளபட்டி அருகில் உள்ள அமலிநகர் என்ற இடத்தில் வந்தபோது எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் நின்றிருந்த பஞ்சரான லாரி மீது அரசு பஸ் பயங்கரமாக மோதியது. 

இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். அந்த பஸ்சில் சுமார் 5௦ பயணிகள் இருந்ததாக தெரிகிறது. 

அவர்களை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். செல்லும் வழியில் ஒருவர் இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது.

இந்த சம்பவம் குறித்து சின்னாளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More