Home> Tamil Nadu
Advertisement

மீனவர் படுகொலை: 13ம் தேதி இலங்கைத் தூதரகம் முற்றுகை -சீமான் அறிவிப்பு

மீனவர் படுகொலை: 13ம் தேதி இலங்கைத் தூதரகம் முற்றுகை -சீமான் அறிவிப்பு

இலங்கை கடற்படையினால் தமிழ் மீனவர் சுட்டு கொல்லப்பட்டதை கண்டித்து சீமான் தலைமையில் இலங்கைத் தூதரகம் முற்றுகைப் போராட்டம் வரும் 13-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

தமிழ் மீனவரைச் சுட்டுப்படுகொலை செய்த சிங்களப் பேரினவாத அரசைக் கண்டித்தும், தொடரும் தமிழக மீனவர் மீதான இனவெறி தாக்குதலைத் தடுக்க இலங்கையின் மீது போர்தொடுத்து கச்சத்தீவை மீட்க இந்திய அரசை வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பாக 13-03-2017 திங்கள்கிழமை காலை 10 மணிக்கு சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.

அதுசமயம் மாநில, மண்டல, மாவட்ட, வட்ட, நகர, ஒன்றிய, பகுதி, கிளை நிர்வாகிகள் மற்றும் இளைஞர், மாணவர், மகளிர், மருத்துவர், வழக்கறிஞர், உழவர், தொழிலாளர், இணையதளப் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு கூறப்பட்டுள்ளது.

Read More