Home> Tamil Nadu
Advertisement

இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!!

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி  உள்பட 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 

இடைத்தேர்தல்- வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்!!

சென்னை: தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி  உள்பட 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாரால் ஒத்திவைக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த 3 தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கி வரும் உள்ளது. 

காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படும். மேலும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்களுடன் 4 பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல் தரப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் நவம்பர் 2-ம் தேதி ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 5-ம் தேதி. அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும். மற்றும் 19-ந் தேதி ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டு 22-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

Read More