Home> Tamil Nadu
Advertisement

மாநில தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி மாநில தேர்தல் ஆணையம் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் மற்றும் டிஜிபி-க்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தக் கோரி அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த வழக்குகளில், தேர்தல் நியாயமாக நடத்தப்படும், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தரப்பிலும், தமிழக அரசு தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், தேர்தலை நியாயமாக நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த தேவராஜ் என்பவர் மூன்றாம் நபராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

fallbacks

அவர் தனது மனுவில், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தப்படாததால் பாதிக்கப்படும் எவரும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், மூன்றாம் நபராக இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனவும் கோவையில் திருமண மண்டபத்தில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வினியோகித்ததாகவும் அதை தடுக்க முயன்றதால் இரு பிரிவினருக்கு இடையில் மோதல் வெடித்ததாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | கச்சத்தீவை மீட்டெடுக்க இது சரியான தருணம்: விஜயகாந்த்

மேலும், சென்னை 105வது வார்டில் வாக்குச்சாவடியைக் கைப்பற்ற முயன்றதாகவும் திருவான்மியூரில் வாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயல் என்பதால் மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி, டிஜிபி சைலேந்திரபாபு மற்றும் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் தண்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் மகேஸ்வரி..!

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Read More