Home> Tamil Nadu
Advertisement

EV Awareness: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்திய மின்சார வாகன பேரணி

Awareness on Green Energy: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  எலக்ட்ரிக் வாகன பேரணி நடைபெற்றது. சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களின் பயன்பாடு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணியில் பலர் கலந்துக் கொண்டனர்

EV Awareness: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்திய மின்சார வாகன பேரணி

சென்னை: பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எலக்ட்ரிக் வாகன பேரணி சென்னையில் நடைபெற்றது. இந்தப் பேரணியை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆஸ்திரேலியா நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் தொடங்கி அமீர் மஹால் வரை இருவரும் இணைந்து இருவரும் எலக்ட்ரிக் ஆட்டோ வாகனத்தில் பயணம் மேற்கொண்டனர்

M Auto Electric Mobility ஏற்பாடு செய்த பாரம்பரிய சுற்றுலா பயண நிகழ்ச்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ஆஸ்திரேலிய நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜர் குக் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து இருவரும் இணைந்து ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுடன் அமீர் மகாலுக்கு எலக்ட்ரிக் வாகனத்தில் சுற்றுலா பயணம் மேற்கொண்டனர். 

fallbacks

அமீர் மஹாலுக்குச்செல்லும் மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுக்காண சுற்றுலாப் பயண நிகழ்ச்சியில் M Auto எலக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனர் யாஸ்மின் ஜவஹர் அலியும் இந்த பயணத்தில் கலந்துக் கொண்டார்.

நிறுவனத்தின் இணை இயக்குனர் மன்சூர் அலி கான், 23 மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகள், பிரபலங்கள் என ஏராளமானோர் மின்சார ஆட்டோ பேரணியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை m auto எலக்ட்ரிக் மொபைலிட்டி தொகுத்து வழங்கியது. மேற்கு ஆஸ்திரேலிய பிரதிநிதிகளுக்கான இந்த பாரம்பரிய சுற்றுப்பயணம் தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதி முதல் அமீர் மஹால் வரையிலான ஐந்து கிலோமீட்டர் தொலைவை நிறைவு செய்தது. இவர்களுக்கு ஆற்காடு இளவரசர் முகமது ஆசிப் அலி இரவு விருந்து அளித்தார். 

மேலும் படிக்க | ஸ்டைலான வடிவமைப்புடன் Oppo Reno 8 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் மூலம் இந்தியாவில் மேற்கு ஆஸ்திரேலியாவின் தொழில்துறை தொடர்புகளை வலுப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்திய சந்தையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் வணிக வாய்ப்புகளை ஈர்க்கவும் சுற்றுலா, பயணம்,உயர்கல்வி மற்றும் வணிக முதலீட்டிற்கான இடமாக இந்தியாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது

மேலும் இந்தப் பாரம்பரிய சுற்றுலா பயணம் எலெக்ட்ரிக் வாகனத்தில் ஏற்பாடு செய்ததன் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் தூய்மையான, நிலையான போக்குவரத்து மாற்றங்களின் அவசியத்தையும் இந்த நிகழ்வு வலியுறுத்தியது.

நிகழ்ச்சிக்கு பின்பாக செய்தியாளர்களிடம் பேசிய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தற்போது ஆஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்துள்ள அமைச்சர் மற்றும் அவரது குழுவுடன் சேர்ந்து தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதி முதல் அமீர் மஹால் வரை பசுமைப் பயணம் எலக்ட்ரிக் ஆட்டோ வாகனத்தில் மேற்கொண்டதை குறிப்பிட்டார்.

இதன் மூலம் வாகன போக்குவரத்தின் போது சுற்றுச்சூழல் மாசு படுவதில் இருந்து விடுபடும் நோக்கமாகவும், பசுமை மறுசுழற்சி ஆற்றலைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாகவும் இந்தப் பயணம் அமைவதாக தெரிவித்தார். மேலும் பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்தி பசுமை ஆற்றலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக இந்த பயணம் அமைவதாக அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரத்தின் பின்னணியில் அரசியல் காரணங்கள் இருக்கிறதா: பாமக சந்தேகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More