Home> Tamil Nadu
Advertisement

கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்த வேண்டாம்: தனியார் பள்ளிகளுக்கு TN அரசு தகவல்

பெற்றோர் தாமாக முன்வந்து தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் செலுத்த எந்த தடையும் இல்லை என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்த பெற்றோரை கட்டாயப்படுத்த வேண்டாம்: தனியார் பள்ளிகளுக்கு TN அரசு தகவல்

சென்னை: தனியார் பள்ளிகள் பெற்றோரை இப்போது கட்டணம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு அரசு இன்று அறிவுறுத்தியுள்ளது.

தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க கூடாது என்ற அரசாணைக்கு தடை கோரியும்,கல்வி கட்டணம் வசூலிக்க அனுமதி வழங்க கோரியும் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே.பழனியப்பன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணம் மூலம் தான் தனியார்  பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊதியம்  வழங்க முடியும். மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக கடந்த 3 மாதங்களாக பள்ளிகள் இயங்கவில்லை. ஆனால் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் தனியார் பள்ளிகள் ஊதியம் வழங்கி வருகின்றன.

 

READ | COVID-19: அசாம் அரசு பள்ளி கட்டணத்தில் 50% தள்ளுபடி....

 

இந்த நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணங்களை வசூலிக்க தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கினால் தான் ஆசிரியர்களுக்கும்,பணியர்களுக்கும் ஊதியம் வழங்கமுடியும்.எனவே தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனவும், வழக்கு முடியும் வரை அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை வசூலிக்காமல் ஆசிரியர் உள்ளிட்டோருக்கு எப்படி ஊதியம் வழங்க முடியும் என கேள்வி எழுப்பி தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், தமிழக அரசு , தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்துமாறு  பெற்றோர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று தான்  உத்தரவு பிறப்பித்துள்ளது. அதே நேரத்தில் பெற்றோர்கள் தாமாக முன்வந்து கட்டணம் செலுத்துவதற்கு எந்த தடையும் இல்லை.

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இடங்களை 248 கோடியை 76 லட்சம் ரூபாய் ஏற்கனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகையைப் பயன்படுத்தி மூன்று நான்கு மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம்.என்று தமிழக அரசு சார்பாக தெரிவித்தார்.

 

READ | மன உளைச்சலுக்கு ஆளான பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவி; அரசு நிர்வாகம்?

 

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் தவணைமுறையில் கல்வி கட்டணம்  வசூலிப்பது தொடர்பாக திட்டம் வகுக்க கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்கலாம் என்றும் அறிவுறுத்திய நீதிபதி தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து விரைந்து தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பான திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

Read More