Home> Tamil Nadu
Advertisement

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் - தேசிய முன்னேற்ற கழகம்!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான டாக்டர் ஜி ஜி சிவா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் - தேசிய முன்னேற்ற கழகம்!

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று தேசிய முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவரும் திமுக தோழமை கட்சியுமான டாக்டர் ஜி ஜி சிவா அறிக்கை வெளியிட்டுள்ளார். மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திமுக மாநில இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்ற பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தல் அதன் பிறகு ஊரக உள்ளாட்சி மன்றத் தேர்தல் 2021 சட்டமன்ற பொது தேர்தல் மீண்டும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திமுக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வதற்கும் மையப்புள்ளியாக இருந்தார்.

மேலும் படிக்க | ஆம்ஸ்டராங் கொலை குற்றவாளி மீது என்கவுண்டர் நடத்தப்பட்டது எப்படி?

குறிப்பாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதற்கும் முக்கிய காரணமாக அமைந்தவர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள். மேலும் தமிழகத்தின் இளைஞர்களின் முகமாக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்களை திமுகவின் அடிமட்ட தொண்டர்கள் மற்றும்  உயர்மட்ட மூத்த நிர்வாகிகள் வரை அனைவரும் திமுக கட்சியின் வருங்கால எதிர்காலம் என்று வெளிப்படையாக பேசி வரக்கூடிய காட்சியை பார்க்கிறோம்.

 தமிழகத்தில் இருக்கக்கூடிய பெரும்பாலான மக்கள் மத்தியில் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கிட வேண்டுமென பொதுவான கருத்து நிலவுவதை நாமும் பார்க்க முடிகிறது. மேலும் எங்களைப் போன்று வளர்ந்து வரும் கட்சிகளை அரவணைப்பதிலும் சரி பெரிய கட்சிகளிடம் அணுகுமுறையும் சரி ஐயா கலைஞர் அவர்கள் ராஜதந்திரமும் ஐயா மு க ஸ்டாலின் ஆகிய தங்களின் பக்குவமும் திரு. உதயநிதி ஸ்டாலினிடம் இருப்பதை காண முடிகிறது.

மேலும் தமிழகத்தை வழிநடத்திட இளமை துடிப்போடு இருக்கக்கூடிய அனைத்து தகுதிகளும் இருக்கக்கூடிய திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் வகையில் இந்த பொன்னான தருணத்தில் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து அனைவரின் நல் எண்ணங்களையும் பூர்த்தி செய்திட வேண்டி தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான திரு மு க ஸ்டாலின் அவர்களுக்கு தேசிய முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பணிவான கோரிக்கை வைக்கிறோம். தமிழகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்ய வேண்டும் என தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் படிக்க | என்கவுண்டர் பயம்.. பாதுகாப்பு கேட்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை ரவுடி பொன்னை பாலு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More