Home> Tamil Nadu
Advertisement

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள்:

இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திமுக இடையே ஏற்ப்பட தொகுதி பங்கீடு குறித்து நாளை அறிவிக்கப்படும்.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுக்கு 2 தொகுதிகள்:

2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தமிழகத்தில் கூட்டணி குறித்து பேசு வருகின்றனர். ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, பாஜக, பாமக மற்றும் புதிய தமிழகம் கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் இந்த கூட்டணியுடன் விரைவில் தேமுதிக இணைய இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. 

திமுக கூட்டணியை பொருத்த வரை காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சிகளுக்குக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்து பேச்சுவாரத்தை நடைபெற்று வருகிறது. 

ஏற்கனவே திமுக கூட்டணியில்  காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு கட்சிகளுடன் தொடர்ந்து திமுக பேச்சுவாரத்தை நடத்தி வந்தது. 

இந்தநிலையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து உடன்பாடு ஏற்பட்டு, எங்களுக்கு இரண்டு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், எந்த தொகுதி என்று திமுகவுடன் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

முன்னதாக திமுக மற்றும் விசிக தொடர்ந்து பேச்சுவாரத்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்ப்பட்டு உள்ளதாகவும், திமுக கூட்டணியில் இரண்டு தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க இறுதி முடிவு செய்யப்பட்டு உள்ளடு. வரும் மக்களவை தேர்தலில் விசிக திமுக சின்னத்தில் போட்டியிடும் எனவும் தகவல் கிடைத்துள்ளது. இதுக்குறித்து அறிவிப்பு நாளை வெளியாகும் எனத்தெரிகிறது. 

Read More