Home> Tamil Nadu
Advertisement

இந்து மதத்தை எதிர்க்கவில்லை.. சனாதானத்தைதான் திமுக எதிர்க்கிறது - அமைச்சர் சேகர் பாபு

சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை ஆய்வு செய்த பின்பு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  

இந்து மதத்தை எதிர்க்கவில்லை.. சனாதானத்தைதான் திமுக எதிர்க்கிறது - அமைச்சர் சேகர் பாபு

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோயில் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, கோயில் ராஜகோபரத்தை தவிர கருவறை உள்ளிட்ட கோவில் மண்டபங்கள் கோபுரங்கள் புதிதாக கட்டப்பட்டு வருகிறது. இதனை நேரில் பார்வையிட்ட இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  குறிப்பிட்ட காலத்திற்குள் கும்பாபிஷேம் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.  தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழகத்தில் நீண்ட நாட்களாக திருப்பணி நடைபெறாமல் உள்ள திருக்கோவிலுக்கு குடமுழுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் 400 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆட்சியில் குடமுழுக்கு நடைபெற்றது.

பல்வேறு கோவில்களில் இந்த ஆட்சியில் நின்று போயிருந்த தேரோட்டங்கள் நடைபெற்று வந்துள்ளது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 2016 ஆம் ஆண்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஓராண்டில் 90% பணிகள் நடைபெற்றுள்ளது. அக்டோபர் மாதம் 27ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறும் என தெரிவித்தார். அம்மன் வீதி உலா வர 4.5 லட்சம் ரூபாய் மதிப்பில் திருத்தேர் பணியும் நடைபெற்று வருகிறது. 1993 ஆம் ஆண்டு ராஜகோபத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. அதன் பிறகு நடைபெறவில்லை. 850 ஆண்டுகள் சிறப்பு வாய்ந்த இந்த கோவில் 4 கோடியே 35 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது  எனவும்,இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் அலுவலகம் புதிதாக 4.5 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது அதையும் ஆய்வு செய்ய உள்ளோம் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!

இந்து சமய அறநிலை துறை சார்பில்  5213 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .1144 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் உள்ள கோவில்களுக்கு தமிழக அரசு சார்பில் 100 கோடி ரூபாய் மானியம் வழங்கி உள்ளது. 2023 -24 ஆண்டுகளில் மேலும் பல கோயில்களை குடமுழுக்கு நடத்த திமுக அரசு நூறு கோடி ஒதுக்கி உள்ளனர். உபயதாரர்கள் மூலம் 66 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து கோவில்களையும் பொக்கிஷமாக பாதுகாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. தெய்வங்களையும் இறை அன்பர்களையும் மகிழ்ச்சியாக வைக்கும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது என்றார்.  திருக்கோவில்கள் திருத்தேர், விருந்து மண்டபங்கள் அனைத்தும் செப்பனிடப்பட்டு சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தினமும் உளறிக் கொண்டிருக்கிறார். அவரின் நடைபயணம் முழுக்க தோல்வி அடைந்துள்ளது. சாதனாதானத்தை ஏற்றுக் கொள்பவர்களை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த ஆட்சி சமத்துவ ஆட்சி சமத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறோம். அதனை வலியுறுத்தும் கடமை, உறுதி, திமுக அரசின் அமைச்சர்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.  பாஜக அண்ணாமலை எங்களின் பணியை திசை திருப்ப முயற்சிக்கிறார். ஆனால் தொடர்ந்து எங்களுடைய திருப்பணி தொடரும் என தெரிவித்தார். சென்னை காசி விஸ்வநாதர் கோவில் குடமுழுக்கு விழா அனைத்து தரப்பு மக்களாலும் பாராட்டப்பட்டது, 94 அர்ச்சகர் பயிற்சி வகுப்பில் மூன்று பேர் பெண்கள் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இதைத்தான் நாங்கள் சமத்துவ ஆட்சி என கூறுகிறோம் என தெரிவித்தார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தின் கீழ் 38 பேர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் தான் எட்டு பேர் பெண் ஓதுவார்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. 

சேலம் குமரகிரி கோயில் சென்றாய பெருமாள் கோவில்கள் திருப்பணியை விரைவு படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அடுத்த முறை நேரடியாக கள ஆய்வு செய்து திருப்பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்தார். கோவில்களில் நடைபெறும் முறைகேடுகள் படிப்படியாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் அவர்களாகவே திருந்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  இந்து கோவில்கள் மன்னராட்சியில் ஏற்படுத்தப்பட்டவை எனவும், இந்து கோவில்கள் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோவில்கள் அவர்களின் சொந்த நிதியில் கட்டப்பட்டது. அதனால் அவர்கள் கோவில்கள் அவர்கள் நிர்வாகிப்பார்கள். நிர்வாக சீர்கேடுகள் ஏற்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சனாதானத்தை பொறுத்தவரை சனாதானத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரையும் நாங்கள் வெறுக்கவில்லை, குலக்கல்வி, உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட சில கோட்பாடுகளை நாங்கள் எதிர்க்கிறோம் எனவும், இந்து மதத்தை தமிழக முதல்வர் எந்த இடத்திலும் குற்றம் சொல்லவில்லை, இறை நம்பிக்கையை எதிர்த்து எங்கும் பேசவில்லை என தெரிவித்தார். சமத்துவத்தின் ஓர் அங்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம் என தெரிவித்தார். பேட்டியின் போது  சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை:முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More