Home> Tamil Nadu
Advertisement

செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழகத்தில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது!

தமிழகத்தில் காலியாக உள்ள 2,345 செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவச் சேவை வேலைவாய்ப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 

காலியாக உள்ள பணிகளுக்கு தகுதியான நபர்கள்  ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்,  இதற்கான கடைசி தேதி பிப்ரவரி 27 என்றும், விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி மார்ச் 1 என்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது இந்த கால அவகாசம் வரும் 13-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், செவிலியர் பணிக்கான போட்டித் தேர்வு திட்டமிட்டபடி, வரும் ஜூன் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

காலியாக உள்ள செவிலியர் பணி குறித்த மேலும் விவரங்களை mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துக்கொள்ளலாம்.

Read More