Home> Tamil Nadu
Advertisement

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் இன்று புதிதாக 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை தாண்டியது!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தில் இன்று புதிதாக 13,776 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10,51,487 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் (Tamil Nadu) இன்று 78 பேர் கொரோனா வைரஸ் (COVID-19) பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,395 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 8,078 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,43,944 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ: இது அன்னதானம் அல்ல, ஆக்ஸிஜன் தானம்: மனதை உருக்கும் குருத்வாராவின் தனித்துவமான சேவை

தமிழகத்தில் தற்போது 95,048 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று மேலும் 3,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 37 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 44 பேருக்கு தொற்று (Coronavirus) உறுதியாகியுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 40,25,783.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More