Home> Tamil Nadu
Advertisement

ராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

ராமநாதபுரத்தில் புதிய மருத்துவ கல்லூரியை முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார்

ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டினார்.

தமிழகத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 24 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவ கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது.

அதில், 6 இடங்களில் (திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர்) அமைய இருக்கும் மருத்துவ கல்லூரிகளுக்கான பூர்வாங்க பணிகளுக்கு தலா ரூ.100 கோடியும், அதற்கான நிலத்தையும் தமிழக அரசு ஒதுக்கியது.

இந்நிலையில், ராமநாதபுரத்தில் அமையவுள்ள புதிய மருத்துவ கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்படி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Read More