Home> Tamil Nadu
Advertisement

இன்று முதல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலவச லட்டு விநியோகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!

இன்று முதல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் இலவச லட்டு விநியோகம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்டு பிரசாதம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!

தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். இக்கோவிலுக்கு நாடெங்கிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். உலக புகழ் பெற்ற இக்கோவிலில் நாளை முதல் இலவசமாக சுமார் 30கி எடை கொண்ட லட்டு பிரசாதமாக கொடுக்கப்படும் என தெரிவித்திருந்தனர். 

மீனாட்சி அம்மனை தரிசனம் செய்து விட்டு சொக்கநாதரை தரிசிக்க செல்லும் வழியில் முக்குறுணி விநாயகர் சந்நிதி அருகில் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு கொடுக்கபட  உள்ளது.  இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு கடந்த தீபாவளி அன்று, மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டது, பின்னர் சில காரணங்களால் தள்ளிப்போனதாகவும் கூறப்பட்ட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (8-ஆம் தேதி) காணொலி காட்சி மூலமாக துவக்கி வைத்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு பிரசாதம் அளிக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் முதன்முறையாக இக்கோவிலில் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது. இந்த இலவச லட்டு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி இன்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இன்று முதல் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு 30-கிராம் எடை கொண்ட லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதியைபோல் மீனாட்சியம்மன் கோயிலிலும் காலை முதல் இரவு வரை தினமும் லட்டு பிரசாதம் வழங்கப்படவுள்ளது.  

 

Read More