Home> Tamil Nadu
Advertisement

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் அதிரடி

இளையராஜா பாடல்களை அவரின் அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாடக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இளையராஜா பாடல்களை பயன்படுத்த தடை: உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: அன்னக்கிளி என்ற படம் மூலம் 1976 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்களுக்கு இசை அமைத்து வரும் இசைஞானி இளையராஜா, இந்தியாவின் சிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். இவரின் இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே கூறவேண்டும். அந்த அளவுக்கு பட்டித்தொட்டு எல்லாம் இவரின் இசை இல்லாமல் இருக்காது. 

இப்படி புகழுக்கு சொந்தமான இளையராஜா இசை அமைத்த பாடல்கள் இல்லாமல் தமிழகம் மட்டுமில்லை உலகம் முழுவதும் தமிழக விழாக்கள் முழுமை பெறுவது இல்லை. 

ஆனால் தன்னிடம் எந்தவித அனுமதியும் வாங்காமல் அனைத்து பொது நிகழ்ச்சி மேடை, டிவி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன் மற்றும் திரைப்படங்களில் என்று பல இடங்களிலும் எனது இசை பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனது இசையை பயன்படுத்தி வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆனால் நான் இசையமைத்து உள்ளேன் என்ற அடிப்படையில் எனக்கு எந்த விதமான வருவாயும் வழங்கப்படுவதில்லை. 

எனவே எனது பாடல் எனது காப்புரிமை. எனது அனுமதியின்றி வணிக ரீதியாக மேடைகளில் பாட தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது நீதிபதிகள், இளையராஜாவின் அனுமதியின்றி டிவி நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், ஆன்லைன் மற்றும் திரைப்படங்களில் அவரின் பாடல்கள் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

Read More