Home> Tamil Nadu
Advertisement

கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு: உயர்க்கல்வித்துறை

CBSE Class 12 Results 2022: அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27 ஆம் தேதி வரை அவகாசம்  அளிக்கப்படும் என என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு: உயர்க்கல்வித்துறை

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 27 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்படும் என என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் உயர்கல்வித்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, ஐந்து நாட்கள் வரை கலை மற்றும் அறிவியல், பொறியியல் படிப்புகள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். 

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த 17 ஆம் தேதி நிறைவடைந்தது. எனினும், அதற்கான கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் நீட்டிக்கப்பட்டது. இதுவரை பொறியியல் கல்லூரிகளில் சேர 1.91 லட்சம் பேரும், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர சுமார் 3.95  லட்சம் பேரும் விண்ணப்பிதுள்ளனர். சிபிஎஸ்இ முடிவுகள் வெளிவராத நிலையில், மாணவர் சேர்க்கை தொடங்காமல் இருந்தது. இந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியான நிலையில், இனி மாணவர் சேர்க்கை செயல்முறை முழு முனைப்புடன் தொடங்கவுள்ளது.

மேலும் படிக்க | CBSE Class 12 Result 2022: டாப் 3 இடங்களில் தென் இந்திய மண்டலங்கள், சென்னை 97.79%

எப்படி விண்ணப்பிப்பது?

பொறியியல் படிப்புகளில் சேர http://www.tneaonline.org என்ற இணையதளத்திலும், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தென் மாநிலங்கள் முதலிடம் 

சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வில், கேரளாவின் திருவனந்தபுரம் மண்டலம் முதல் இடத்திலும், கர்நாடகாவின் பெங்களூரு மண்டலம் இரண்டாவது இடத்திலும், தமிழகத்தின் சென்னை மண்டலம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. திருவனந்தபுரம் 98.83 சதவீத தேர்ச்சியுடன் சிறப்பாக செயல்பட்டுள்ள மண்டலமாக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து 98.16 சதவீத தேர்ச்சியுடன் பெங்களூரு இரண்டாவது இடத்தையும், 97.79 சதவீதத்துடன் சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த ஆண்டு தேர்வுக்கு பதிவு செய்த 14,44,341 மாணவர்களில் 1435366 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 1330662 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி விகிதம் 92.71% ஆகும். இது கடந்த ஆண்டின் 99.37% இலிருந்து குறைவாக உள்ளது. இருப்பினும், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த முடிவுகள் சிறப்பாகவே உள்ளன.

மேலும் படிக்க | CBSE class 12th Result: சிபிஎஸி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Read More