Home> Tamil Nadu
Advertisement

வரும் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்..!

காவிரியில் தண்ணீர் திறக்கப்படாதது பற்றி ஆலோசிக்க ஜூன் 24 ஆல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளனது!!

வரும் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம்..!

காவிரியில் தண்ணீர் திறக்கப்படாதது பற்றி ஆலோசிக்க ஜூன் 24 ஆல் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளனது!!

மேட்டூர் அணையை நம்பி தமிழகத்தில் 12 டெல்டா மாவட்டங்களில் முப்போக சாகுபடி நடைபெற்று வந்தது. ஒவ்வொரு ஆண்டும், ஜுன் 12 ஆம் தேதி முதல் ஜனவரி 28 ஆம் தேதி வரை, 231 நாட்களுக்கு முறை வாரியாக தண்ணீர் திறக்கப்படும். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது.

இதனிடையே, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது ஏற்கெனவே நடைபெற்ற கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.19 tmc நீரை தரவேண்டும் என்று கர்நாடகாவை, தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகா அரசு இதுவரை ஒரு சொட்டு நீர் கூட தமிழகத்திற்கு திறந்து விடவில்லை. இந்நிலையில் வருகிற ஜூன் 24 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய 4 மாநிலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனால், வருகிற 24 ஆம் தேதி நடைபெற இருக்கும் கூட்டம் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read More