Home> Tamil Nadu
Advertisement

அதிமுக அம்மா அணி சார்பில் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஓபிஎஸ்

அதிமுக அம்மா அணி சார்பில் பேச்சுவார்த்தைக்கு தயார்: ஓபிஎஸ்

அதிமுக இரு அணிகள் இணைவது தொடர்பாக பேச்சு நடத்த அழைத்தால் நாங்கள் தயார் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுக என்பது எம்ஜிஆர். மற்றும் ஜெயலலிதாவால் உருவாக்கிய கட்சி இது ஒரு குடும்பத்தின் கட்டுக்குள் செல்லக்கூடாது என்பது தொண்டர்களின் எண்ணம். சசி அணி தரப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த குழு எங்களை சந்தித்தால் நாங்கள் பேச்சு நடத்த தயார். 

இவ்வாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று இரவு அமைச்சர் தங்கமணி வீட்டில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். 

இந்த பரபரப்பான அரசியல் சூழலில் தேனி சென்றிருந்த ஓ.பன்னீர்செல்வம், இன்று மாலை சென்னை திரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பல முக்கிய முடிவுகள் இன்று எடுக்கப்படலாம் என தெரிகிறது.

Read More