Home> Tamil Nadu
Advertisement

மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி!!

சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகை திரிஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் திரிஷா அஞ்சலி!!

சென்னை மெரினாவில் கருணாநிதியின் நினைவிடத்தில் நடிகை திரிஷா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த ஜூலை 27-ஆம் நாள் நள்ளிரவில் உடல்நிலை கோளாறு காரணமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மாலை 6.10 மணியளவில் கலைஞர் காலமானார். 

இதைத்தொடர்ந்து ராஜாஜி அரங்கில் முக்கிய தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நிலையில், நேற்று மாலை சுமார் 4 மணியளவில் கருணாநிதி உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் அரசு மரியாதையுடன் நேற்று இரவு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிலையில் மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் இன்று நடிகை திரிஷா அஞ்சலி செலுத்தினார். முன்னதாக இன்று காலை கவிஞர் வைரமுத்து அவரது மகன்களுடன் கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்

Read More