Home> Tamil Nadu
Advertisement

கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த 75 வயது மூதாட்டி!

சிதம்பரத்தில் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த மூதாட்டியை காவல்துறையினர் மீட்டு வீட்டில் சேர்த்துள்ளனர். 

கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த 75 வயது மூதாட்டி!

சிதம்பரம் நகரில் உள்ள கீழவீதியில் 75 வயது மூதாட்டி ஒருவர் நடைபாதையில் அமர்ந்திருக்கிறார். நடக்க முடியாமல் சிரமப்பட்ட அவரைப் பார்த்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் அவர் அருகில் சென்று விசாரித்தனர். அப்போது அவரது பெயர் கோமதி (75) என்பதும், வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியே வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், இரண்டு காவலர்களை அழைத்து, மூதாட்டியை ஆட்டோவில் ஏற்றி உறவினர்களிடம் சேர்க்க ஏற்பாடு செய்தார்.

மேலும் படிக்க | 40 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு! பகீர் பின்னணி!

fallbacks

இதையடுத்து சிதம்பரம் அருகே வையூர் கிராமத்தில் உள்ள மூதாட்டி கோமதியின் உறவினரான கண்ணகி என்பவர் வீட்டிற்கு சென்ற போலீசார், கோமதியை அங்கு விட்டு விட்டு வந்தனர். வீட்டை விட்டு வெளியே வந்து வீதியில் நின்ற மூதாட்டியிடம் விசாரணை நடத்தி உறவினர்கள் வீட்டில் போலீசார் சேர்த்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த செயலை பார்த்த அங்கிருந்தவர்கள் போலீசாரின் நடவடிக்கைகளையும், மனித நேயத்தையும் வெகுவாக பாராட்டினர்.

fallbacks

மேலும் படிக்க | தேர்வு எழுத வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவர தடை..! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More