Home> Tamil Nadu
Advertisement

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!!

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி), சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!!

4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!!

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் (தனி), சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்!!

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கான தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்குகிறது. அந்தத் தொகுதிகளுக்கு உள்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். பொது வேட்பாளர் என்றால் ரூ.10 ஆயிரமும் ஆதிதிராவிடர் வேட்பாளர் என்றால் ரூ.5 ஆயிரமும் கட்டி மனு அளிக்க வேண்டும்.

வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 29-ஆம் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற மே 2-ஆம் தேதி கடைசி நாளாகும். மே 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

அதே நாளில் ஏற்கெனவே நடைபெற்ற 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிகையும் நடைபெறும். 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை திமுக தலைமை அறிவித்துவிட்டநிலையில் மே 1-ஆம் தேதி முதல் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். அதிமுக சார்பிலும் வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று முடிந்துள்ளது. இதரக் கட்சிகளும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

 

Read More