Home> Tamil Nadu
Advertisement

பச்சையப்பன் கல்லூரி முதல்வரை தாக்கியவர்கள் சிறையில் அடைப்பு

பச்சையப்பன் கல்லூரி முதல்வரை தாக்கியவர்கள் சிறையில் அடைப்பு

பச்சையப்பன் கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரியில் தற்போது படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் அவரது நண்பர்களும் பச்சையப்பர் சிலைக்கு மாலை அணிவிக்க கல்லூரிக்கு சென்றனர்.

அந்த சமயம், அங்கு வந்த கல்லூரி முதல்வர் காளிராஜ் கல்லூரியில் படிக்கும் தற்போதைய மாணவர்கள் தவிர மற்ற அனைவரும் கல்லூரியை விட்டு வெளியேறும்படி கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த சில மாணவரகள், கல்லூரி முதல்வர் மீது தாக்குதல் நடத்தினர். மேலும் அவரது கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதில் காயமடைந்த கல்லூரி முதல்வர் காளிராஜ் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தமிழக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

தற்போது வரை, இது தொடர்பாக 31 பேர் கைது செய்யப்பட்டனர். இதில், 9 பேர் 18 வயதுக்கு உட்பட்ட வர்கள் என்பதால் அவர்கள் கெல்லிசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள 22 பேரும் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Read More