Home> Tamil Nadu
Advertisement

3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டல்:முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

3 வயது பெண் குழந்தையை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய 63 வயது முதியவருக்கு கடலூர் நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 

3 வயது குழந்தையிடம் பாலியல் சீண்டல்:முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை..!

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த அகரம் பகுதியை சேர்ந்தவர் 63 வயதான தேசிங்கு ராஜா.இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த ஆண்டு அப்பகுதியை சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தை தனது பாட்டியிடம் தனியாக இருந்தபோது, பாட்டிக்கு தெரியாமல் குழந்தையை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கியுள்ளார்.

இதனையடுத்து வீட்டிற்கு வந்த குழந்தையின் பெற்றோர், குழந்தையின் உடலில் இருந்த காயங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனை அடுத்து தேசிங்கு ராஜா மீது குழந்தையின் பெற்றோர் போலீஸில் புகாரளித்துள்ளனர். புகாரின் பேரில் தேசிங்கு ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இது தொடர்பான வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட தேசிங்கு ராஜாவை குற்றவாளி என உறுதி செய்த நீதிபதி எழிலரசி, குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அரசு இழப்பீடு தொகையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | கற்பழிப்பு முயற்சியில் பயங்கரம் - 5 மாத கர்ப்பிணி படுகொலை

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Read More