Home> Tamil Nadu
Advertisement

கடலில் இருந்து கடற்கரைக்கு வந்த 15 டால்பின்கள்!

திருச்செந்தூர் அருகே புன்னைக்காயல் கடற்கரையில் 15 க்கும் மேற்பட்ட  டால்பின்கள் கரை ஒதுங்கியுள்ளது

கடலில் இருந்து கடற்கரைக்கு வந்த 15 டால்பின்கள்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள புன்னைக்காயல் என்று மீனவர் கிராமம் உள்ளது. நேற்று இரவு 5-மணி அளவில் திடீரென 15-க்கும் மேற்பட்ட டால்பின்கள் உயிருடன் கரை ஒதுங்கியது. 

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மீனவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது படகுகளில் கரை ஒதுங்கிய  டால்பின்களை ஏற்றி கடலுக்குள் கொண்டு விடும் முயற்சியில் ஈடுபட்டனர்.  இதைத்தொடர்ந்து சில டால்பீன்கள் மீண்டும் கரை ஒதுங்கியுள்ளது. அதில் 4 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.

இதை தொடர்ந்து சம்பவ இடத்தில் திருச்செந்தூர்  மீன்வளத்துறை ஆய்வாளர், வனத்துறையினர், மீன் ஆராய்ச்சி நிலைய ஆராய்ச்சியாளர்கள் நேரடியாக ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று கடந்த ஆண்டும் மணப்பாடு கடல்பகுதியில் ஏராளமான திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரிழந்தது  என குறிப்பிட்டிருந்தனர்.

Read More